போதை மருந்து தயாரித்த காவலர்

மணிப்பூர் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறையின் சமீபத்தில் முஜிபுர் ரஹ்மான் என்ற தலைமைக் காவலரை போதைப் பொருட்களுடன் கைது செய்தனர். அவரது இல்லத்தில் நடைபெற்ற சோதனையில், 430 கிலோ அபின், 40 கிலோ பிரவுன் சுகர் உள்ளிட்ட சுமார்  ரூ. 90 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த போதை மருந்துகளை அவர்கள் தங்கள் வீட்டில் அமைத்த தொழிற்சாலையில் உற்பத்தி செய்துள்ளனர் என கண்டறியப்பட்டது இது சம்பந்தமாக முஜிபுர் ரஹ்மானின் மகன் ஃபசல் கான், விநியோகஸ்தர் மற்றும் யைரோபோக் துலிஹால்,முகமது ஃபிரோஜ் அகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.