அரசு ரூ.500 கோடி பாக்கி

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, சிறுபான்மை இல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடம் அளித்து இலவச கல்வி வழங்க வேண்டும். அதற்கான கல்வி கட்டணத்தை, மத்திய அரசே மாநில அரசுக்கு வழங்கும். தமிழகத்தில் இச்சட்டத்தின்படி, மூன்றரை வயது முடிந்த குழந்தைகள் எல்.கே.ஜி.,யில் சேர்க்கப்படுகின்றனர். ஆனால், மத்திய அரசின் விதிப்படி, ஐந்து வயதான குழந்தைகள்தான் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். எனவே, தமிழக அரசின் விதிகளுக்கு முரணான நடைமுறையால் இலவச சேர்க்கைக்கான கல்வி கட்டணத்தை மத்திய அரசிடம் இருந்து பெறமுடியாது. எனவே, மாநில அரசே, பள்ளிக் கட்டணம் செலுத்தி வருகிறது. இந்நிலையில்,  இரண்டு ஆண்டுகளாக இந்த இலவச மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு வழங்க வேண்டிய கல்வி கட்டண தொகை ரூ. 500 கோடியை இன்னமும் தரவில்லை. இதற்கு நிதிப்பற்றாக்குறை காரணம் கூறப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கை பணிகள் துவங்கிஉள்ள நிலையில் முந்தைய கல்வி கட்டண பாக்கியை, அரசு உடனடியாக வழங்குமாறு பள்ளிகள் கோரிக்கை வைத்துள்ளன.