இடித்த பள்ளியை கட்டாத அரசு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, ‘வரிசாங்குப்பம்’ கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கட்டடம் இல்லாததால், அப்பள்ளியின் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் அருகிலுள்ள கோயில் வளாகத்தில் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எட்டு மாதங்களுக்கு முன் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட பள்ளிக் கல்வித்துறை ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து பழைய பள்ளி கட்டடம் இடித்துத் தள்ளப்பட்டது. ஆனால் இதுவரை புதிய கட்டடம் கட்டுவதற்கான முயற்சிகள் நடைபெறவில்லை. பள்ளிக்கு கட்டடம் இல்லாததால் மாணவர்கள் அருகில் உள்ள கோயில் வளாகத்திற்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர். புதிய பள்ளி கட்டடத்தை விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மாணவவர்கள், பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.