சிறுமி கொடூரக்கொலை

உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டம் தடிப்ரா கிராமத்தைச் சேர்ந்த ஹிந்து நபரான ராஜ் பாண்டேவின் மகளை அவரது வீட்டின் அருகில் வசிக்கும் முஸ்லிம் நபரான முகமது நவ்ஷாத் கொடூரமாக கொலை செய்துள்ளார். ராஜ் பாண்டேவின் வீட்டின் அருகே வசிக்கும் முகமது நவ்ஷாத்தை, தனது மகனைப் போலவே ராஜ் பாண்டே பாவித்து வந்தார். இந்நிலையில், பக்கத்து ஊரில் நடந்த கண்காட்சிக்கு தனது நண்பர்களுடன் சென்று திரும்பிக்கொண்டிருந்த ராஜ் பாண்டேவின் மகளை, நவ்ஷாத் வீட்டில் இறக்கி விடுவதாகக் கூறி தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றான். ஆனால், வீட்டுக்குச் செல்லாமல், ஒரு காட்டுப் பகுதிக்கு அந்த சிறுமியை அழைத்துச்சென்ற முகமது நவ்ஷாத், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். ஆனால், சிறுமி இதற்கு இடம் கொடுக்காமல் கடுமையாக போராடினார். இதனால், ஆத்திரமடைந்த நவ்ஷாத், சிறுமியை சரமாரியாக தாக்கியதுடன் இரு கைகளின் நரம்புகளை துண்டித்தான், கால் எலும்புகளையும் அடித்து நொறுக்கி கொடூரமாக சித்ரவதை செய்து குற்றுயிரும் குலையுயிருமாக அங்கேயே போட்டுவிட்டு, தப்பிச் சென்று விட்டான். இரவு முழுவதும் சிறுமியைக் காணாததால் பதற்றமடைந்த அவரது குடும்பத்தினர் அவரை தேடி அலைந்தனர். பிறகு, தங்களது கிராமத்திலிருந்து 5 கி.மீ., தொலைவிலுள்ள காட்டுப் பகுதியில் பலத்த காயங்களுடன் சிறுமி கிடப்பதாகத் தகவல் அறிந்து அங்கே சென்ற குடும்பத்தினரும் காவலர்களும் சிறுமியை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, தலைமறைவாக இருந்த குற்றவாளி நவ்ஷாத்தை காவலர்கள் தேடினர். பின்னர் ஒரு சிறிய என்கவுண்டர் நடத்தி அவனை சுட்டுப் பிடித்து கைது செய்தனர். இதனிடையே, உத்தரப் பிரதேச அரசு, நவ்ஷாத்தின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கியது.