தி.மு.கவின் பலாத்கார குற்றவாளி

விருதுநகரில் ஒரு பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த தி.மு.க உறுப்பினர் விஷயத்தில் தி.மு.க தலைமை என்ன செய்யப்போகிறது? என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அவரது அறிக்கையில், ‘விருதுநகரில், ஒரு கும்பல் வீடியோ மூலம் பிளாக்மெயில் செய்து, 22 வயது பெண்ணை  கூட்டாக பலாத்காரம் செய்த அவலச் செய்தியறிந்து அதிர்ச்சியும் சோகமும் அடைந்தேன். இதைவிட கூடுதல் அதிர்ச்சியளிக்கும் விஷயம்; இந்த வெட்கக்கேடான செயலுக்கு மூளையாக இருந்தது ஒரு உள்ளூர் தி.மு.க பிரமுகர். இந்தக் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது அவசியமே, ஆனால், தற்போது தி.மு.க ஆட்சியில் ஒட்டுமொத்த காவல்துறையை மேம்படுத்துவதே, மக்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். முதல்வர் தனது கட்சிக்காரர்களின் பிடியிலிருந்து காவல்துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பாரா?’ என கேட்டுள்ளார்.