பிரியாணி கடையை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு பிரியாணி கடையில், அதே பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் பிரபு, அவரது நண்பர் தயாளன் ஆகியோர் சாப்பிட சென்றுள்ளனர். சிக்கன் சேமியா ஃபிரை மாலையில் தான் கிடைக்கும் என்பது தெரிந்திருந்தும், அது எங்களுக்கு இப்போதே வேண்டும் என அடம் பிடித்ததுடன் கடை உரிமையாளர் முகமது சாலிக், கடை ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் கடையையும் அடித்து நொறுக்கினர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்த கடை உரிமையாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமாக உணவகங்களில் புகுந்து தாக்குதல் நடத்துவதில் பெயர் பெற்ற தங்கள் கூட்டணியின் தலைமை கட்சியினரை தற்போது காங்கிரசார் பின்பற்றுகின்றனர் என அங்குள்ள மக்கள் பேசிவருகின்றனர்.