சீனர்கள் கைது

மேற்கு வங்காளத்தின் சிலிகுரி, பாக்டோகிரா விமான நிலையத்தில், சந்தேகத்திற்கிடமாக திரிந்த நவ் ஜாங் ஜங் (39) மற்றும் கை லெங் (42) என்ற இரண்டு சீனர்கள் சி.ஐ.எஸ்.எஃப் படையினர் கைது செய்தனர். அவர்களிடம் எந்த முறையான ஆவணங்களும் இல்லை. மேலும், அவர்களிடமிருந்து உத்தரப்பிரதேச முகவரிகளைக் கொண்ட இரண்டு போலி ஆதார் அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில் அவர்கள் ஆந்திராவின் திருப்பதிக்கு சென்று கொண்டிருந்ததாக காவல்துறை தெரிவித்தது.