சிறுமிக்கு உதவிய முதல்வர்

திரிபுரா அகர்தலாவின் புறநகர் பகுதியைச் சேர்ந்த உத்தம் தாஸ் என்பவரின் மகள் பர்ஷா. எட்டாம் வகுப்பு படித்துள்ள இந்த சிறுமி, ‘அவரது தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். எங்கள் குடும்பம் ஒற்றை அறை வீட்டில்தான் வசிக்கிறோம். படிக்க எழுத வீட்டில் ஒரு மேசை இல்லாததால் சிரமமாக உள்ளது. என் தந்தைக்கு போதிய வருமானம் இல்லை’ என பா.ஜ.கவை சேர்ந்த அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவுக்கு முகநூலில் தெரிவித்திருந்தார். இதனை அறிந்த முதலமைச்சர், உடனடியாக அந்த சிறுமிக்கு உதவும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடனடியாக படிக்கும் மேசை, மருந்துகள், மளிகை, உணவு பொருட்கள், சிறுமியின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டன. முதல்வரின் உடனடி உதவி எங்கள் குடும்பத்துக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார் பர்ஷா.