பா.ஜ.க அமைதியாக இருக்காது

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சிதம்பரம் நடராஜரை அவதுாறாக பேசிய நபரை, அறிவாலயம் அரசு கைது செய்யாமல் இருப்பதை கண்டித்து, மே 23ல் சிவனடியார்கள் போராடினார்கள். கயவனை தண்டிக்காமல் போராடினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, இன்று சிதம்பரம் நடராஜர் கோயிலை முற்றுகையிட்டுள்ளது ஹிந்து சமய அறநிலையத்துறை. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலில் அரசுக்கு என்ன வேலை? தொடர்ச்சியாக ஒரு சமயத்தாரை மட்டும் மன வருத்தத்துக்கும், துன்புறுத்தலுக்கும் ஆளாக்கும் அறிவாலய அரசு செய்யும் காரியங்களை கண்டு தமிழக பா.ஜ.க அமைதியாக இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.