திரைப்படத்திற்கு தடை நீக்கம்

புழ முதல் புழ வரே என்ற திரைப்படத்திற்கு கேரள திரைப்பட தணிக்கைத் துறை விதித்திருந்த தடையை கேரள உயர் நீதிமன்றம் அகற்றியது. 1921 மாப்ளா படுகொலைகள், வன்முறைகள், கட்டாய மதமாற்றங்கள் போன்றவற்றை தகுந்த ஆவணங்கள், ஆதாரங்களின் அடிப்படையில் தயாரித்து இயக்கியுள்ளார் ராம சிம்ஹன் (அக்பர் அலி). திரைப்பட தணிக்கைத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் இடதுசாரி மற்றும் மதசார்பற்றவாதிகளும் இப்படத்திற்கு அனுமதிச் சான்றிதழ் வழங்காமல் தொடர்ந்து தடைசெய்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் அந்தத் தடையை அகற்றியுள்ளது.