துவங்கிவிட்டதா 3ம் அலை

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பல்கலைக் கழகத்தின் இயற்பியல் துறை நிபுணரான டாக்டர் விபின் ஸ்ரீவத்சவா, கொரோனா மூன்றாம் அலை தொடர்பாக, கடந்த 15 மாதங்களில் நிகழ்ந்த புதிய தொற்று பரவல், இறப்பு தொடர்பான தினசரி பதிவுகளை பகுப்பாய்வு செய்து வருகிறார். அந்த ஆய்வின்படி, கடந்த 4ம் தேதி கொரோனா மூன்றாம் அலை துவங்கிவிட்டதாக அவர் கூறியுள்ளார். கடந்த பிப்., மாதம் நாட்டில் இரண்டாம் அலை துவங்கியபோது பதிவான புள்ளி விபரங்கள், தற்போதைய நிலையுடன் ஒத்திருக்கிறது. கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படாவிட்டால், மூன்றாம் அலை வேகம் எடுப்பதை தடுக்க முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார். இவர் ஐதராபாத் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.