கோயில் நில ஆக்‍கிரமிப்பு நீதிமன்றம் உத்தரவு

சேலம், தாராமங்கலத்தில் உள்ள இளமீஸ்வரர் கோயில் நிலத்தில் அனுமதியில்லாமல் கட்டடங்கள் கட்டப்படுவதை தடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற கோரி, சேலத்தைச் சேர்ந்த ஏ. ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரில், கோயில் நிர்வாகம், தாசில்தார் யாரும் சரிவர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, மனுதாரரின் மனு மீது, கடந்த 5 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படாதது குறித்து, மாவட்ட ஆட்சியர் காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 22-ம் தேதிக்‍குத் தள்ளிவைத்தனர்.