கோயில் இடிப்பு தடுத்து நிறுத்தம்

திருப்பூர் மாவட்டம் உடுமலை பள்ளபாளையம் பஞ்சாயத்தில் கருப்பராயன் கோயில் கருவண்ணராயர் கோயிலை இடிப்பதற்கு தமிழக அரசின் வருவாய்த் துறையினர்  முற்பட்டனர். இதையறிந்த இந்துமுன்னணி அமைப்பினர் உடனடியாக இதில் தலையிட்டு கோயில் இடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர். மேலும், தற்போது இந்து முன்னணி சார்பில் இதற்காக வழக்கு தொடுக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் இடிப்பதை நிறுத்தி வைக்க ஆணை பெறப்பட்டுள்ளது.