கோயில் அருகில் டாஸ்மாக்

சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலத்தை சேர்ந்த திருத்தொண்டர்கள் சபையின் நிறுவனரான ஆ.ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “சேலம் ‘லீ’ பஜார் மேம்பாலத்தின் கீழே உள்ள பழமைவாய்ந்த அருள்மிகு ஆஞ்சநேயர் கோயிலின் தூண்கள் பாதுகாப்பற்ற நிலையில் பக்தர்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் அபாயகரமாக உள்ளன. இந்தக் கோயிலை ஒட்டி மதுபானக் கடை மற்றும் மதுபானக் கூடம் இயங்கி வருகிறது. இந்தக் கடையை அகற்றக் கோரி தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறையிடம் புகார் அளித்தும் அந்தப் புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என” என்று கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இந்த மனுவுக்கு, தமிழக அரசும், டாஸ்மாக் நிர்வாகமும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.