தாமிரபரணி தாய்க்கு சீர்செய்ய வாரீர்

பாரத தேசம் முழுவதும் ஹிந்துக்கள் நதிகளை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். அந்த வகையில் தாமிரபரணி தாய்க்கு உகந்த நாளான ஆடிப்பெருக்கு 18 (ஆகஸ்ட் 3) அன்று நடைபெற உள்ளது. அன்று தாமிரபரணி நதிக்கு அபிஷேகம் செய்து, தாய்மார்கள் மங்கள சீர் செய்யும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதில் விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர், துறவியர் பெருமக்கள், ஆன்மீகப் பெரியவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். ஆடிப்பெருக்கு சீர்செய்ய விரும்பும் தாய்மார்கள், மாத்ரு சக்தி அமைப்பாளரை 8344586656 என்ற எண்ணிலும் முன்பதிவுக்கு 8610480723 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. சிறப்பு மிகுந்த இந்த ஆன்மீக விழா, சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.