தமிழ் நடிகர்களின் தேசப்பற்று?

பாரதம் 75வது சுதந்திர தினத்தை வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறது. சுதந்திரத்தின் பவளவிழா ஆண்டை அனைவரும் கொண்டாட வேண்டும், ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை தங்களுடைய வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும், சமூக வலைத்தளங்களில் தங்கள் டிபியில் தேசியக்கொடியை வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கோரியிருந்தார். இதையொட்டி பல்வேறு மொழிகளைச் சேர்ந்த திரை நட்சத்திரங்கள், தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேசியக்கொடியைப் பதிவேற்றியுள்ளனர். மலையாள நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால், சுரேஷ்கோபி, தெலுங்கு நடிகர்கள் உள்பட பலர் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் இருக்கும் டிபியில் தேசியக்கொடியாக பதிவேற்றியுள்ளனர். ஆனால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நடிகர் நடிகையர் இதுவரை தங்கள் டிபியை மாற்றவில்லை. இது அவர்களின் தேசப்பற்றை குறித்த சர்ச்சையையும் விவாதத்தையும் சமூக ஊடகங்களில் எழுப்பியுள்ளது.