பாகிஸ்தானில் தலிபான் கொடி

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள லால் மசூதியில் தலிபான் கொடிகள் மீண்டும் கட்டப்பட்டன. அங்குள்ள மதரஸா மாணவர்கள் தலிபான்களைப் புகழ்ந்து ‘சலாம் தலிபான்’ என்ற ஒரு பாடலையும் பாடினர் அது குறித்து விசாரிக்க வந்த காவல்துறையினரை மௌலானா அப்துல் அஜீஸ் துப்பாக்கியை காட்டி மிரட்டினார். பாகிஸ்தான் தலிபான்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் கூறினார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மௌலானா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது இஸ்லாமாபாத் காவல்துறையினர், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். லால் மசூதி, தலிபான்களுக்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. இந்த மசூதியில் தாலிபான் கொடிகள் ஏற்றப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த மாதமும், மசூதியில் பல தாலிபான் கொடிகள் ஏற்றப்பட்டன.