பாரதத்திற்கு தலிபான்கள் வேண்டுகோள்

பாரதம் அதன் தூதரக உறவுகளை முன்போலவே தொடர வேண்டும் என ஆப்கனை துப்பாக்கி முனையில் கைப்பற்றிய தலிபான்கள் தற்போது வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனை விடுத்தவர் நமது இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்று ஆபகான் ராணுவத்தில் பணியாற்றி பிறகு தலிபான் அமைப்பில் இணைந்து 1996-2001களில் தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சராக இருந்த ஷேர் முகம்மது அப்பாஸ் ஸ்டனிக்சை என்பது குறிப்பிடத்தக்கது.