பா.ஜ.கவை ஆதரித்ததால் தலாக்

உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஷெனாயிராம் என்ற முஸ்லிம் பெண் ஒருவர், பா.ஜ.கவிற்கு வாக்களித்தார். இதனை அறிந்த அவரது கணவர் நதீம் மற்றும் குடும்பத்தினரும் அந்தப் பெண்ணை கொடுமைப்படுத்தியுள்ளனர். இறுதியாக நதீம் ஷெனாயிராமுக்கு முத்தலாக் கொடுத்து வீட்டை விட்டு துரத்திவிட்டார். இதனையடுத்து கடந்த மார்ச் 3ம் தேதி காவல்நிலையத்தில் ஷெனாயிராம் புகார் அளித்தார். உள்ளூர் காவல்துறையினர், நதீம் மீது வழக்குப்பதிவு செய்தாலும் விசாரணை மந்த கதியிலேயே நடைபெற்றது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது அறிவுறுத்தலின் பேரில் தற்போது இந்த வழக்கு விசாரணை வேகமெடுத்துள்ளது.