‘ஜெய் ஹிந்த்’ சொல்லாத சூர்யா

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை குறித்த படமான ராக்கெட்ரி: நம்பி விளைவு படம் பலமொழிகளில் வெளியாகியுள்ளது. படத்தின் கடைசி காட்சியில், நம்பி நாராயணன் பேட்டி முடிந்ததும், நம்பி நாராயணன், ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறி முடிப்பார். ஹிந்தி மொழியில் பேட்டி எடுத்த நடிகர் ஷாருக்கானும் பதிலுக்கு, ‘ஜெய் ஹிந்த்’ என கூறுவார். தமிழ் மொழியில், நடிகர் சூர்யா பேட்டி எடுப்பார். ஆனால், ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறமாட்டார். இதற்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இதுகுறித்து பேசியுள்ள தமிழக பா.ஜ.க நிர்வாகியும், நடிகையுமான காயத்ரி ரகுராம், “இது என்ன முரண்பாடு என புரியவில்லை. சூர்யாவுக்கு, ‘ஜெய் ஹிந்த்’ பிடிக்கவில்லையா? அல்லது காட்சி அமைப்பே அப்படி எடுக்கப்பட்டதா? சூர்யா ஜெய் ஹிந்த் கூற மாட்டார் என்றால், அது என்ன கொச்சை வார்த்தையா? சூர்யா, தான் இந்த நாட்டின் குடிமகன் அல்ல என்பது போலவே நடந்து கொள்கிறார். அவர் அந்த வார்த்தையை சொல்லவே மாட்டேன் என்று அடம் பிடித்திருந்தால், அவருக்கு இந்த நாட்டில் என்ன வேலை? தேசப் பற்றில்லாதவர் நாட்டை விட்டு வேறு நாட்டுக்கு செல்லலாம். அதற்கு என்ன தேவையோ, அதை செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன். சூர்யா சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டும். இல்லையெனில், அவர் திட்டமிட்டே இதனை செய்தார் என்று தான் எடுத்துக் கொள்ளமுடியும்” என்று கூறியுள்ளார்.