உ.பி அரசை பாராட்டிய உச்ச நீதிமன்றம்

கொரோனா தொற்றுநோய் காலத்தில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப வரும்போது ஏற்படும் இடர்பாடுகள், அங்கு அவர்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை பல மாநில அரசுகள் சரிவர கையாளவில்லை. ஆனால், இதனை ஒரு தனி இணையதளப் பதிவு, நிவாரண ஆணையர், உணவு பொருட்கள் வழங்கல், மறுவாழ்வு, தொழில் மேம்பாடு, கடனுதவி என மிக சிறப்பாக உத்தர பிரதேச அரசு கையாண்டது. உ.பி. அரசு, இது குறித்த ஒரு விரிவான பிரமாணப் பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, இதனை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், யோகி ஆதித்தியநாத் தலைமையிலான உ.பி அரசை வெகுவாக பாராட்டியுள்ளது.