அன்னா ஹசாரே ஆதரவு

மகாராஷ்டிராவில் கோயில்களைத் திறக்கவும் பக்தர்களை அனுமதிக்கவும் பா.ஜ.க போராட்டம் நடத்தி வருகிறது. அம்மாநிலத்தில் பல்வேறுத் துறைகளும் வழக்கம்போல செயல்படுகின்றன. கொரோனா தடுப்பூசி போடப்பட்ட மக்களை உள்ளூர் ரயில்களில் பயணம் செய்ய அனுமதித்துள்ளது. ஆனால், கொரோனா பரவலைக் காரணம் காட்டி  தொடர்ந்து கோயில்களை மூடிவைத்துள்ளது உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர அரசு. இந்நிலையில், கோயில்களை மூடிவைத்துவிட்டு மதுக்கடைகள், பார்கள் செயல்பட அனுமதிக்கும் அரசின் முடிவை அன்னா ஹசாரே கண்டிக்கிறார். மேலும், கோயில்களில் தடையை நீக்க பக்தர்கள் போராட்டம் நடத்தினால் அதில் கலந்துகொண்டு ஆதரவு வழங்க தான் தயாராக இருப்பதாக ஹசாரே தெரிவித்துள்ளார்.