காங்கிரஸ் தலைவருக்கு சம்மன்

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், முறைகேடாக சொத்து சேர்த்தது, ஹவாலா பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்திருந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், சிவகுமார் தவிர, அவரது நண்பர்கள் நான்கு பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கை விசாரிக்கும்  டில்லி நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஜூலை 1ல் சிவக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.