மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 1,01,757 பேரில் 27,311 பேர் புதியவர்கள். அதில் 19,038 மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து வந்து சேர்ந்தக்வர்கள். மாணவர் சேர்க்கை தொடர்வதால் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட வேலை இழப்பு, தனியார் பள்ளிக் கட்டண கெடுபிடி போன்ற காரணங்களால் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.