கோயில் இடிப்பை கண்டித்து போராட்டம்

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஸ்ரீ கனகாம்பிகை உடனுறை கனக காளீஸ்வரர் ஆலயத்தையும் அதில் உள்ள இறைவனுடைய சிலைகளையும் சில நாட்களுக்கு முன்பாக முன்னறிவிப்பு ஏதுமின்றி உடைத்து சேதப்படுத்தியது தமிழக அரசு. இதனையடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, தமிழக அரசையும், மாவட்ட ஆட்சியரையும் இதற்கு துணை புரிந்தவர்களையும் கண்டித்து மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற்றது. விக்ரகங்களை உடைத்ததற்கு மன்னிப்பு கேட்கக் கோரியும் புனரமைத்து செய்து தரக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறு ஹிந்து இயக்கங்களை சர்ந்தவர்களும் பக்தர்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில், கனக காளீஸ்வரர் ஆலயத்தில் கடந்த வாரம் இடித்து தரைமட்டமாக்கிய காஞ்சி மாவட்ட டி.ஆர்.ஓ பன்னீர் செல்வத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்ரீபெரும்புதூர் தாலுகா அலுவலகத்தில் இந்துமுன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.