வலுவான நியாயமான சுதந்திரமான நீதித்துறை

டெல்லியில் நடைபெற்ற உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் ஏற்பாடு செய்திருந்த குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கான பாராட்டு விழாவில் உரையாற்றிய ஜக்தீப் தன்கர், “நீதிபதிகளின் கண்ணியம், நீதித்துறைக்கான மரியாதை தவிர்க்க முடியாது. இவை சட்டம் மற்றும் அரசியலமைப்பு விதியின் அடிப்படை. வலுவான, நியாயமான, சுதந்திரமான நீதித்துறை அமைப்பு ஜனநாயகத்திற்கு பாதுகாப்பான உத்தரவாதம்” என்று கூறினார். மேலும் முன்னர் தான் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றிய போது தனக்கு உறுதுணையாக இருந்த நீதிபதிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, உச்சநீதிமன்ற பார் அசோசியேஷன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் விகாஷிங் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.