மாநில செயற்குழு கூட்டம்

தமிழக பா.ஜ.கவின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரி நேற்று நடைபெற்றது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வை கண்டித்து தீர்மானம், ராமர் பாலம் பாதிக்கப்படாமல் சேது கால்வாய் திட்டம் அமைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம், புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவத்திற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், வரும் ஏப்ரல் 14ம் தேதி திருச்செந்தூரில் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதில் தெரிவித்துள்ளார்.