ஆன்மிகத் தலைவர்கள் கண்டிக்க வேண்டும்

இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் சமூக ஆர்வலருமான அஷோக் பண்டிட் வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் பதிவில், வங்கதேசத்திலும், பாரத்த்தில் உள்ள மாநிலங்களான மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் ஹிந்துக்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் குறித்து தெரிவித்திருந்தார். மேலும், ‘சத்குரு ஜக்கி வாசுதேவ், ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் போன்ற ஹிந்து ஆன்மிக குருமார்கள், ஆன்மிகத் தலைவர்கள் தங்களது மௌனத்தை கலைக்க வேண்டும், அவர்கள் குறைந்தபட்சமாக இதற்கு கண்டனத்தையாவது தெரிவிக்க வேண்டும். அவர்களது மௌனத்தை கனத்த இதயத்துடன் கண்டிக்க விரும்புகிறேன்’ என தெரிவித்துள்ளார். அவரை பின் தொடர்பவர்களில் ஒருவர், ‘அனைத்து சங்கராச்சாரியர்கள் மற்றும் அனைத்து ஹிந்து குருமார்களும் ஒன்றிணைந்து ஹிந்துக்களின் குரலாக ஒலிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டுள்ளார்.