பா.ஜ.கவுக்கு சபாநாயகர் பதவி

புதுச்சேரி பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.அதற்குப்பின், பா.ஜ.க மாநிலத்தலைவர் சாமிநாதன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர்,’தேசிய ஜனநாயக கூட்டணியில் அமைச்சர்கள், சபாநாயகர் பங்கீடு முடிந்தது.பா.ஜ.கவிற்கு சபாநாயகர் பதவியுடன் அமைச்சர்கள் பதவியை தர உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.பா.ஜ.கவில் யாருக்கு என்ன பதவி என்பது பற்றி கட்சி தலைமை தெரிவிக்கும்.பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்துள்ளது.முதல்வர் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் யாரும் சந்தித்து பேச முடியவில்லை.அதனால், அமைச்சரவை அமைவதில் காலதாமதம் ஏற்பட்டது.தற்போது அவர் குணமடைந்தவுடன், பேசி நல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளது.விரைவில் அமைச்சரவை அமைந்து அமைச்சர்கள் பொறுப்பேற்பார்கள்’ என தெரிவித்தார்.