கற்பழிப்பு வழக்கில் எம்.எல்.ஏ மகன்

ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸில் சிறுமி ஒருவர் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு சிறுமி திரும்பியபோது இந்த சம்பவம் நிகழ்ந்து உள்ளது. இந்த பலாத்கார சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் சிறுவர். மேலும், இதில் ஒரு எம்.எல்.ஏவின் மகனும் சிறுபான்மை அமைப்பின் தலைவரும் ஈடுபட்டுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையயில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இதற்கிடையே, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் முஸ்லிம்களின் கட்சியான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் எம்.எல்.ஏவின் மகன். காவல்துறை யாரையும் இதுவரை கைது செய்யவில்லை. உடனடியாக இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தெலுங்கானா மாநில பா.ஜ.க குற்றம் சாட்டியுள்ளது.