விழித்தெழுந்த சமுதாயத்தால்தான் சமூக சீர்திருத்தங்கள் சாத்தியம்

அருணாச்சல பிரதேசத்தில் பிரச்சாரகராக பணியாற்றிய முன்னாள் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் சுனில் கிட்காரு மராட்டியில் எழுதிய “வரத ஈஷான்ய பாரதிச்சி” என்ற புத்தகத்தை விதர்பா சாகித்ய சங்க அரங்கில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் வெளியிட்டு பேசினார். முன்னதாக, 1990களில் அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றிய கிட்காரு மராத்தி நாளிதழான தருண் பாரத்தில் பாரதத்தின் வடகிழக்கு பிராந்தியத்தின் நிலைமை குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இந்தக் கட்டுரைகள் “வரத ஈஷான்ய பாரதிச்சி” புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. மண்டல அளவிலான இலக்கிய அமைப்பான விதர்பா சாகித்ய சங்கத்தின் (வி.எஸ்.எஸ்) தலைவர் மனோகர் மைசல்கர் இதில் கலந்துகொண்டார்.

நிகழ்வில் பேசிய மோகன் பாகவத், “விழித்தெழுந்த மக்களின் பங்கேற்புடன் சமூக மாற்றம் சாத்தியமாகும். சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் சுயமரியாதை, உயர்ந்த ஒழுக்க விழுமியங்கள், ஒருமைப்பாடு, தேசபக்தி மற்றும் சுய ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் 1925ம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து விழித்தெழுந்த சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. எந்த ஒரு தலைவரோ அல்லது அமைப்போ நாட்டையும் சமூகத்தையும் மாற்ற முடியாது. எனவே, ஆர்.எஸ்.எஸ்ஸுக்குக் கூட நாட்டைச் சீர்திருத்துவதற்கான மொத்த ஒப்பந்தத்தை வழங்காதீர்கள். எந்த சவால்களையும் எதிர்கொண்டு அவற்றை வெற்றிகரமாகச் சமாளிக்கும் விழிப்புணர்வோடு விழிப்புடன் கூடிய மக்களின் கூட்டு முயற்சியே இதற்குத் தேவை.

கூட்டு முயற்சிகள் என்ற இந்த எண்ணமே ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் வேரூன்றியுள்ளது. நாட்டைச் சீர்திருத்துவதற்கான பொறுப்புகளை மக்கள் தாங்களாகவே ஏற்க வேண்டும். இதற்காக ஆர்.எஸ்.எஸ் அல்லது எந்தத் தலைவர் அல்லது எந்த ஒரு அமைப்பையும் சார்ந்து இருக்கக்கூடாது. ஒரு தலைவர், ஒரு அமைப்பு, ஒரு கட்சி சீர்திருத்தங்களை கொண்டு வர முடியாது. உண்மையான மாற்றம் சாமானியன் அதற்காக எழுந்து நிற்கும்போதுதான் சாத்திப்படும். பாரத சுதந்திரப் போராட்டம் 1857ல் தொடங்கினாலும், 1947ல் தான் சுதந்திரத்தின் அவசியம் மற்றும் அதில் பங்கேற்பது குறித்து மக்கள் விழிப்படைந்தபோதுதான் அது பலனளித்தது.

ஒரு அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் எப்போதும் தன் சுயபரிசோதனை மற்றும் அவ்வப்போது தனது பணியை மறுபரிசீலனை செய்வதில் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளது. இந்த நடைமுறை பல்வேறு இயல்புகளின் சவால்களை எதிர்கொள்ள சங்கத்திற்கு உதவியது. சில சவால்கள் அதன் இருப்பையே அச்சுறுத்தியது. புதிய யோசனைகளை ஏற்றுக்கொள்வது, பிற மதங்களின் கொள்கைகளுக்கு இடமளிப்பது மற்றும் தேசிய தேவைகள் குறித்த கொள்கைகளை மாற்றுவது ஆகியவை ஆர்.எஸ்.எஸ் தனது இலக்குகளை அடைய உதவியது.

இருப்பினும், சங்கப் பணியின் தன்மையைப் புரிந்து கொள்ள சமூகம் அதற்கான நேரத்தை எடுத்துக் கொண்டது. அவர்கள் இதை உணர்ந்தவுடன் பாரதத்தின் தேசிய மற்றும் சமூக வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் தொடும் ஆர்.எஸ்.எஸ் விரிவாக்கத்தை நிறுத்த முடியாது என்று உணர்ந்தனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்தப் பயணம் அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. இன்றைய நிலைக்கு அதனை கொண்டுவர பலர் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். சங்கம் மக்களைச் சென்றடைவதில் ஸ்வயம்சேவகர்களின் அர்ப்பணிப்பு உணர்வும் சங்கத்தில் சேர்வதற்கு மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி, அதன் செயல்பாடுகளில் அவர்கள் தீவிரமாகப் பங்கேற்பதை உறுதிசெய்த அவர்களின் முயற்சியும்தான் இன்று சமூகத்தில் விரும்பத்தக்க சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் கொண்டு வந்துள்ளது.

ஒவ்வொரு ஹிந்துவும் தேசிய மறுசீரமைப்பு செயல்பாட்டில் திறமையாகவும் ஊக்கத்துடனும் இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. ஏனெனில் மக்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த கனவை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ் சமூகத்தை ஒழுங்கமைக்கிறது. சுனில் கிட்காரு எழுதிய இந்த புத்தகம் அவரது வடகிழக்கு மாநிலங்களின் நேரடி அனுபவம் மற்றும் அவற்றின் உயிர்வாழ்வு. இது போன்ற அற்புதமான புத்தகத்தை எழுதிய கிட்காருவுக்கு வாழ்த்துக்கள்” என வாழ்த்தினார்.