பழனியில் சிவலிங்கம் சேதம்

பழனி அருகே கோதைமங்கலம் பகுதியில் பெரியாவுடையார் கோயில் உள்ளது. அங்கு செல்லும் வழியில் பாப்பான் குளக்கரையில் சிவலிங்கம், நந்தி, கன்னிமார், கருப்புசாமி கோயில் உள்ளது. அந்த குளக்கரையில் இருக்கும் சிவலிங்கத்தை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ‘கோதைமங்கலம் குளத்துக்கரையில் இருக்கும் சிவலிங்கத்தை சமூக விரோதிகள் திட்டமிட்டு சேதப்படுத்தி உள்ளனர். அவர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று விஷ்வ ஹிந்து பரீக்ஷித் மாவட்ட செயலாளர் செந்தில் குமார் கூறியுள்ளார்.