எஸ்.எப்.ஜே பொறுப்பேற்பு

பஞ்சாப்பின் தர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள அமிர்தசரஸ் பதிண்டா நெடுஞ்சாலையில் உள்ள சர்ஹாலி காவல் நிலையத்தின் மீது ராணுவ தரத்திலான ராக்கெட் லாஞ்சர் ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் அறிவுறுத்தலின் பேரில் காலிஸ்தானி பயங்கரவாதிகளால் இந்தத் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தானி பயங்கரவாத அமைப்பான சீக் ஃபார் ஜஸ்டிஸ் (எஸ்.எப்.ஜே) பொறுப்பேற்றுள்ளது.