மதரசாவில் பாலியல் துன்புறுத்தல்

மத்தியப் பிரதேசம் இந்தூரில் முஸ்லிம் மதகல்வி பள்ளியில் (மதரசா) கல்வி பயில 12 வயது சிறுமி கடந்த மாதம் சேர்க்கப்பட்டார். இப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர், இச்சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். இது குறித்து, இச்சிறுமி தன் பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து, சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் மதரசா ஆசிரியர் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர். அப்போது அந்த ஆசிரியரும் அவரது இரு மகன்களும் சிறுமியின் தந்தை, உறவினர்களை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கினர். சிறுமியின் தந்தை இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவலர்கள், ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான மூவரையும் தேடி வருகின்றனர்.