பாலியல் கொடுமைகள்

மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றம், 2015ம் ஆண்டு ஒரு 13 வயது சிறுவனை சர்ச்சில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கிறிஸ்தவ கத்தோலிக்க பாதிரி ஜான்சன் லாரன்சை போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி என தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதித்தது. இதேபோல மற்றொரு வழக்கில், குஜராத்தின் சோங்காத் தாலுகாவில் உள்ள ஒரு சர்ச்சில், பிரார்த்தனைக்காக சென்ற ஒரு சிறுமியை பாதிரி பலிராம் கோக்னி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அவரது மனைவி அனிதா அந்த கொடூர சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளார். இதனை வைத்து அந்த பெண்ணை அவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்தனர். இதுகுறித்த புகாரின் பேரில், பாதிரியையும் அவரது மனைவியையும் காவல்துறை கைது செய்துள்ளது.