சேவையே வேள்வி

சென்னை பெருமழை காரணமாக சென்னை மாநகரின் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. திரு.வி.க மணடலம் புளியந்தோப்பு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இடுப்பளவு தண்ணீர் தேங்கியிருந்தது. சுகாதாரத் துறையின் வேண்டுகோளிற்கிணங்க, புளியந்தோப்பு அரசு (UCHC) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி பெண்கள், சமீபத்தில் பிரசவித்த தாய்மார்கள் ஆகியோருக்கு சுமார் 5 கி.மீ பயணித்து சென்ற ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதி சேவா சங்கத்தின் தன்னார்வலர்கள், அவர்களுக்கு உணவு பொட்டலங்கள், பால் மற்றும் கொசுவர்த்திகள் வழங்கினர். அவர்களை திரு.வி.க மண்டல மேற்பார்வையாளர் பிரதீப் குமார் அழைத்து பாராட்டினார்.