சேவைத்துளிகள்

1. ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி மற்றும் கணபதிபாளையம் பகுதிகளில், கொரோனாவிற்கான நோயெதிர்ப்பு சக்திக்காக, மூலிகை ஆவி ஏற்பாட்டை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.கே. சரஸ்வதி துவக்கி வைத்தார்.

2. நீலகிரியில், ஆர்எஸ்எஸ், சேவாபாரதி, சோஹோ பௌண்டேஷன் மற்றும் நீலகிரி சேவா கேந்திரம் சார்பாக சுமார் 9 லட்சம் மதிப்புள்ள இரண்டு ஆக்ஸிஜன் காலிப்ரேஷன் இயந்திரங்கள் கூடலூரில் உள்ள புஷ்பகிரி மருத்துவமனை மற்றும் சேரங்கோட்டில் உள்ள டேன்டீ மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. (2 A , 2 B)

3. மன்னார்குடியில் கலங்கரை சேவா அறக்கட்டளை சார்பாக, ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி, சோஹோ பௌண்டேஷன், இந்து முன்னணி உள்ளிட்ட இயக்கங்கள் இணைந்து மன்னார்குடி ராஜ் மருத்துவமனைக்கு, ரூ. 4 லட்சத்தி 60 ஆயிரம் மதிப்புள்ள ஆக்சிஜன் உபகரணங்களை இலவசமாக வழங்கப்பட்டது.

4. சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி மற்றும் சோஹோ பௌண்டேஷன் சார்பாக ரூ. 4 லட்சத்தி 60 ஆயிரம் மதிப்புள்ள ஆக்ஸிஜன் காலிப்ரேஷன் இயந்திரங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

5. திருநெல்வேலியில் உள்ள பொன்ரா மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனைக்கு ஆர்.எஸ்.எஸ், சேவாபாரதி மற்றும் சோஹோ பௌண்டேஷன் சார்பாக ஆக்ஸிஜன் காலிப்ரேஷன் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது.