ஆயுதங்கள் பறிமுதல்

ஜம்மு காஷ்மிர் காவல்துறையினரின், புர்மண்டல் மோர் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு டிரக்கை சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது, அந்த வாகனத்தில் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு கையெறி குண்டுகள் மீட்கப்பட்டன. அதன் ஓட்டுனரை விசாரித்தபோது அவர், புல்வாமாவில் வசிக்கும் முந்தாசிர் மன்சூர் என்பது தெரியவந்தது. மேலும், இந்த ஆயுதங்கள், எல்லை தாண்டி ட்ரோன் மூலம் அனுப்பப்பட்டன. அவற்றை காஷ்மீர் பள்ளத்தாக்குக்கு கொண்டு செல்லதான் பணிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.