கைப்பற்றப்பட்ட பி.எப்.ஐ ஆவணங்கள்

கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.இதில், தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்புக்கு சொந்தமான பல ஆவணங்களை கைப்பற்றப்பட்டன. உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் நிதி திரட்டும் பி.எப்.ஐ அமைப்பின் கிரிமினல் சதித்திட்டம் தொடர்பாக ஏப்ரல் 13, 2022 அன்று என்.ஐ.ஏவால் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த பணத்தைக்கொண்டு கேரளா, தமிழகம், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் அயங்கரவாத நடவடிக்கைகள் மற்றும் கலவரங்களை நடத்த பி.எப்.ஐ திட்டமிட்டிருந்தது.இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பொருட்களில் பல பயங்கரவாத பயிற்சி முகாம்கள் தொடர்பான ஆவணங்கள், டிஜிட்டல் உபகரணங்கள் மற்றும் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.