மணல் குவாரி ஒப்பந்தம்

அ.தி.மு.க., ஆட்சி யில் மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்காததால், பல ஆறுகளில் வெள்ள நீரோட்டம் இருந்து வருகிறது. குவாரிகளை திறந்தால், மழை காலங்களில் நீரோட்டம் பாதிப்பதுடன், பிளாஸ்டிக் உள்ளிட்டவை தேங்கி, ஆறுகளின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்.இதை பற்றி கவலைப்படாமல், அ.தி.மு.க., ஆட்சியில் மணல் விற்பனையில் ஈடுபட்ட மூன்று ‘மாபியா’க்களை அழைத்து, தன் வீட்டிலேயே ரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார். அதில் புதுக்கோட்டையை சேர்ந்த மணல் வியாபாரி கரிகாலனும் ஒருவர். அவரை தன் வீட்டிற்கு அழைத்து துரைமுருகனும் அவரது மகனும் வேலுார் எம்.பியுமான கதிர் ஆனந்தும் சேர்ந்து பட்டு சால்வை அணிவித்து கௌரவித்துள்ளனர்.