சேண்ட் ஏவுகணை

இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவை இணைந்து முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரான சேண்ட் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளன. இது ஒரு டாங்கி எதிர்ப்பு ஏவுகணையாகும். நம்மிடம் ஏற்கனவே உள்ள ஹெலினா ரக ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமே இந்த சேண்ட். இந்த ஏவுகணையால் 15 கி.மீ முதல் 20 கி.மீ தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். ஏவுகணையில் அதன் மூக்குப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சீக்கர் கருவி துல்லியத்தை கூட்ட உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.