சாமி சிலை உடைப்பு

திருச்சி மாவட்டம் கோஅபிஷேகபுரத்தில் ஸ்ரீ வழிவிடு விநாயகர் கோயில் உள்ளது. சில அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் இக்கோயிலில் உள்ள விநாயகர் திருமேனியை சேதப்படுத்தி அருகில் உள்ள தாமரைக் குளத்தில் வீசியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி பொறுப்பாளர்கள் காவல்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை ஒன்றுதிரட்டி போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி அறிவித்துள்ளது.