சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுர கும்பாபிஷேகம் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைக்காக ராஜகோபுரத்தின் முன்புறம் யாகசாலை அமைக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கியது. இதில் யஜமான சங்கல்பம், தேவதானுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, அக்னி சங்கரஹணம், தீர்த்த சங்கரஹகணம் போன்றவை நடைபெற்றன. இன்று விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், இரண்டாம் கால யாக பூஜை புண்ணியாக வாசனம், மூன்றாம் கால யாக பூஜை நடைபெறுகிறது. நாளை அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வாசனம், நான்காம் கால யாக பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து 6 மணிக்கு மகாபூர்ணாஹுதியும், தீபாராதனையும் காலை 6.45 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.