ஹிந்து சொத்துகள் விற்பனை

பாரத பாகிஸ்தான் பிரிவினையின்போது பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய ஹிந்துக்களின் சொத்துக்களை இ.டி.பி.பி என்ற அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்த அறக்கட்டளை கராச்சியில் உள்ள ஹிந்து பயணியர் தங்கும் தர்மசாலா நிலத்தின் ஆவணங்களில் மோசடி செய்து தொழிலதிபர் ஒருவருக்கு விற்பனை செய்தது. இதை எதிர்த்து பாகிஸ்தான் ஹிந்து குழுவின் தலைவர் டாக்டர் ரமேஷ் குமார் வன்க்வனி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து தர்மசாலாவை இடிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், எந்த சட்டத்தின் கீழ் சிறுபான்மை ஹிந்துக்களின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டன என்பது குறித்து இ.டி.பி.பி அறக்கட்டளை பதில் அளிக்க உத்தரவிட்டார். இ.டி.பி.பி., நிர்வாகத்தின் கீழ், 1,831 ஹிந்து கோயில்கள், குருத்வாராக்கள் உள்ளன. அவற்றில், 31ல் மட்டுமே வழிபாடுகள் நடக்கிறது. மற்றவை மூடப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும், குத்தகைக்கு விடப்பட்டும் உள்ளன.