ஆர்.எஸ்.எஸ். சிறப்பு பயிற்சி

பாரதத்தில் கொரோனா 3வது அலையும் தாக்கக்கூடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதனால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என கூறப்படுகிறது. அப்படி 3வது அலை ஏற்பட்டால் அப்போது மக்களுக்கு உதவுவதற்காக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதன் தொண்டர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதன்படி, ‘நாடு முழுவதும் நடைபெறும் இந்த முகாம் ஆகஸ்டு 1ல் சில பகுதிகளில் தொடங்கும். அடுத்த சில நாட்களில் பிற பகுதிகளிலும் நடத்தப்பட்டு, அடுத்த மாத இறுதிக்குள் இந்த பயிற்சி முடிக்கப்படும். இதில் கொரோனாவில் சிக்கியுள்ள தாய்மார்கள், குழந்தைகளுக்கு உதவுவது தொடர்பாகவும், பெருந்தொற்று நேரத்தில் மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து பணியாற்றுவது தொடர்பாகவும் பயிற்சி வழங்கப்படும்’ என ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அகில பாரதிய பிரசார் பிரமுக் சுனில் அம்பேத்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.