ரோமியோ பெறும் ஏவுகணைகள்

நார்வே நாட்டு கோங்ஸ்பெர்க் நிறுவனம், ராணுவ ஹெலிகாப்டர் உள்ளிட்ட வானூர்திகளில் இருந்து ஏவக்கூடிய நேவல் ஸ்டிரைக் ஏவுகணையை ( NSM-HL) மேம்படுத்தியுள்ளது. இது ஒரு ஐந்தாம் தலைமுறை ஹை-சப்சோனிக், கப்பல் எதிர்ப்பு, தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் க்ரூஸ் ரக ஏவுகணை. இந்த ஏவுகணைகளை பெறும் முதல் நாடாக பாரதம் உள்ளது. மிகவும் நவீனமான MH-60R ரோமியோ ஹெலிகாப்டர்களை நாம் அமெரிக்காவிடம் இருந்து டெலிவரி பெறும் நேரத்தில் இந்த ஏவுகணைகள் வாங்க கொங்ஸ்பெர்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த NSM-HL ஏவுகணை, 400 கிலோ எடை கொண்டது. 185 கி.மீ வரை உள்ள இலக்குகளை தாக்கி அழிக்க வல்லது. NSM தற்போது நான்கு கடற்படைகளில் செயல்பாட்டில் இருந்தாலும் வானூர்தி ரகம் பெற உள்ள முதல் நாடாக நமது பாரதம் விளங்கும்.