சர்ச்சையில் சிக்கும் ராபர்ட் வத்ரா

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வாத்ரா, கடந்த புதன்கிழமை காலை காரில் தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது பராபுல்லா மேம்பாலம் அருகே அவரது கார் திடீரென வேகம் குறைந்தது. இதனால், பின்னால் இருந்து மற்றொரு கார், ராபர்ட் வத்ராவின் கார் மீது மோதியது. ராபர்ட்டின் டிரைவர் காரை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், டெல்லி காவல்துறை ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு டெல்லியில் ராபர்ட் வாத்ராவின் காரை முந்தி சென்ற ஒரே காரணத்திற்காக ஒரு நபரை துரத்திப் பிடித்து வழக்குப் பதிவு செய்தது காவல்துறை. அந்த நபர், அப்பகுதியில் வி.ஐ.பிக்கள் போக்குவரத்து நடைபெறுவது குறித்து தனக்குத் தெரியாது என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.