சாலைதான் முக்கியம் பெயரல்ல

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள மலை கிராமத்தில் 60 ஆண்டு காலத்திற்கு மேலாக சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை டோலி கட்டி எடுத்து செல்லும் அவல நிலை நிலவுகிறது. இதுகுறித்து தமிழ்க பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வாணியம்பாடி அருகே 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் ஒரு கிராமத்திற்குச் சாலை வசதி இல்லை. இறந்தவர் உடலை வீட்டுக்கு எடுத்த செல்ல கட்டையில் சுமந்து சென்ற ஊர் மக்கள். இது போன்று ஆயிரக் கணக்கான கிராமங்கள் தமிழகத்தில் உள்ளது. 2021 – 22ம் ஆண்டு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்திற்காக, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, தமிழகத்தை ஆளும் தி.மு.க அரசுக்கு  வழங்கிய நிதி ரூ. 440 கோடி. சாலைகளுக்கு தனது குடும்பத்தாரின் பெயரை சூட்ட முனைப்புக் காட்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின், இது போன்று சாலை வசதிகளே இல்லாத கிராமங்களுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியைச் சரியாகப் பயன்படுத்தி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.கவின் கோரிக்கை’ என தெரிவித்துள்ளார்.