பின்வாங்கிய காங்கிரஸ்

உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி எம்.பிக்களான அகிலேஷ் யாதவ் மற்றும் அஸம்கான் ஆகியோர் வெற்றிப்பெற்று சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனதையடுத்து அவர்கள் தங்களது ராம்பூர் மற்றும் அசம்கர் தொகுதிகளின் எம்.பி பதவிகளை ராஜினாமா செய்தனர். காலியாக உள்ள இந்தத் தொகுதிகளுக்கு வரும் ஜூன் 23ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் போட்டியிடப் போவதில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், 2024ல் நடைபெற உள்ள லோக்சபா தேர்தலே எங்கள் இலக்கு என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இடைத்தேர்தலில் போட்டியில்லை என பகுஜன் சமாஜ் கட்சியும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.