முன்பதிவு மீண்டும் தொடக்கம்

கொரோனா தடுப்பூசி மருந்துகள் கையிருப்பு இல்லாததால் கடந்த வாரம் பெரும்பாலான நாட்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படவில்லை. இதனால், தடுப்பூசி போட்டுக்கொள்ள gccvaccine.in என்ற இணையதள முன்பதிவு சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் அரசு சுகாதாரத் துறை சார்பில் சென்னை மாநகராட்சிக்கு சுமார் 45 ஆயிரம் டோஸ் தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து முகாம் நடைபெறும். இணையதள முன்பதிவும் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். ஒரு மையத்துக்கு ஒதுக்கப்படும் மொத்த தடுப்பூசி மருந்துகளில் 3ல் ஒரு பங்குக்கு மட்டுமே இணையதள முன்பதிவு அனுமதிக்கப்படும். மீதமுள்ள 2 பங்கு தடுப்பூசிகள் நேரில் வருவோருக்கு போடப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.